Tuesday, November 19, 2019

ஓரங்க நாடகம் - மூவேந்தர் உலா

 
சோழன் :-                “தஞ்சைக்கு வருவதாக சொன்ன நண்பர்கள் இன்னும் வரவில்லையே?”

சேரன் :-                    இதோ வந்து விட்டோம் நண்பரே!”

பாண்டியன் :-          உங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் நாட்டினையும் பார்த்து விட்டு வரலாமே என்ற எண்ணம்தான்”.

சேரன் :-                    “இப்போதுதான் எல்லாம் இணைக்கப்பட்டு ஒரே தமிழ்நாடாகி விட்டதே”.

சோழன் :-                 “வாருங்கள் வாருங்கள், அப்படியே நகர்உலா சென்று விட்டு வரலாமே!”

பாண்டியன் :-          “ஆம், நாம் யாரென்பதையும் அங்ஙனமே மக்களுக்கு சொல்லி விடலாம்!”

சேரன் :-                     “நான்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். எனது தந்தை உதியஞ்சேரல். தாய் வெளியன் வேள் என்பவனின் மகள். எனது ஆட்சிக்காலம் சங்க கால ஆட்சியாகும். நான் 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறேன். என்னைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பதிற்றுப் பத்து என்னும் நூலில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

சோழன் :-                “அட‍டா! அருமை”

சேரன் :-                    நான் இமையத்தில் எம் வில் சின்னத்தைப் பொறித்தவன். ஆரியர்களை அடிபணியச் செய்தவன். நாட்டில் புரட்சி செய்த யவனர்களையும் அடக்கியவன்.

பாண்டியன் :-          “பலே! பலே!”. என் பெயர் கூன் பாண்டியன்.

சேரன் :-                    “என்ன கூன் பாண்டியனா?”

பாண்டியன் :-          ஆனால் எனக்கு சுந்தரப் பாண்டியன் என்னும் வேறு பெயரும் உண்டு.

சோழன் :-                “என்னிடம் நின்றசீர் நெடுமாறன் என்று சொன்னீர்களே!

பாண்டியன் :-          “ஆமாம், ஆமாம். என் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள். நான் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தேன். என் மனைவி மங்கையர்க்கரசி ஆவாள்.

சோழன் :-                 யார்? சைவ மதத்தைப் பரவச் செய்த மங்கையர்க்கரசி அம்மையாரா?

பாண்டியன் :-          “ஆமாம். நான் என் வினையின் காரணமாக கூன் கொண்டிருந்தேன். மேலும் சில சமணப் பெரியோரின் பேச்சினைக் கேட்டு என் ஆட்சியில் சமணம் தழைக்கச் செய்தேன். இதைப் பொறுக்காத என் மனைவி எனக்குத் தெரியாமல் நால் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவர்கள் மதுரைக்கு வரச் செய்தாள். அப்போது அவரைக் கொல்ல சமணர்கள் அவரிருந்த இடத்திற்கு தீ வைத்தனர். அத்தீ அவரை ஒன்றும் செய்யாது. எங்களைத் தான் படுத்தியது.

சோழன் :-                 “அட‍டா.. பின்பு என்னவாயிற்று?”

பாண்டியன் :-          “திருஞான சம்பந்தர்தான் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, எனக்கு திருநீறு தடவி, என்நோயை மறையச் செய்தார். நோயோடு எனது நெடுநாள் இருந்த கூனும் மறைந்தது.. அன்று முதல் எனக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது. நான் சைவ சமயத்தின் பெருமைகளை உணர்ந்தேன் அதிலிருந்து சிவத்தொண்டில் ஈடுபட்டேன்.”

சேரன் :-                    “ஆஹா.. கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது. தங்களைப் பற்றிக் கூறலாமே”

சோழன் :-                 “நான்தான் விஜயாலயச் சோழன். பிற்காலச் சோழர்களின் ஆட்சி என்று நீங்கள் பெருமைப்படும் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரச் சோழர்களின் பொற்கால ஆட்சிக்கு வித்திட்டவன்.

சேரன் :-                    “அப்படியா?”

சோழன் :-                 “ஆம். உறையூரைத் தலைநகராகக் கொண்டு என் ஆட்சியைத் தொடங்கினேன். பின்பு திருப்புறம்பியப்போரில் பாண்டியர்களைத் தோற்கடித்து, தஞ்சாவூரைக் கைப்பற்றினேன். எனக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்தே முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தான்.

பாண்டியன் :-          “போர்க்களத்தில் பகைவர்களாகவே சந்தித்த நாம் இன்று நண்பர்களாக சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.”

சேரன் :-                    “ஆமாம். வாருங்கள். நகர்வலம் செல்வோம்.”

சோழன் :-                 “எப்படி ஒரு மாற்றம் இது? இத்தனை புதிய கண்டுபிடிப்புகள்.. அப்பப்பா?”

பாண்டியன் :-          ஆமாம்.. இருந்தும் மக்கள் அத்துணை மகிழ்ச்சியாக இருப்பது போல தெரியவில்லையே.

சேரன் :-                    “ஆம். நம்முடைய ஆட்சிக்குப் பின் வந்த ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டு இருந்தார்கள் அல்லவா?

பாண்டியன் :-          “அவர்களிடம் இருந்து விடுதலை பெற்று, மீண்டு வரும் போதே நமது செல்வங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டனர்.”

சேரன் :-                    “இப்போதிருக்கும் நிலையை அடைய நம் மக்கள் பட்ட பாட்டினை சொல்லி மாளாது.

சோழன் :-                 “இப்போது மக்களாட்சி நடைபெறுகிறது. நம் மக்களைப் பிரிக்க மதம், சாதி, இனம் என எத்துணை வந்தாலும் தமிழ் என்னும் தெய்வமொழி நம்மை இணைக்கும். திண்ணமாக பொற்கால வாழ்வு முறையை மீண்டும் நம் மக்கள் அடைந்தே தீர்வர்”

பாண்டியன்:-           “அதிலென்ன ஐயம்? சரி சரி.. நாம் வானுலகம் செல்ல வேண்டிய நேரம் வந்தாகி விட்டது. வாருங்கள் செல்வோம்”.

எல்லோரும்:-           “ஆமாம். ஆமாம்”..

 

 

 

Tuesday, August 1, 2017

ஔவையார்

        பண்டைய தமிழ்நாடு கண்ட பல்வேறு பெண்கவிஞர்களில் ஔவைப் பாட்டிக்கே முதல் இடமுண்டு.. அவருடைய வாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இறையோடு கூடிய வாழ்க்கை மற்றும் தமிழோடு கூடிய வாழ்க்கை. இறைத்தன்மை கொண்டவர் என்பதற்கு அவருடைய இளமைப்பருவ வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொண்டாலே போதும்.. விநாயகர் மீது அவர் கொண்ட பக்தியின் காரணமாக முதுமைப் பருவத்தை வரமாகக் கேட்டு இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விட்டார் என்ற புராணக்கதை ஒன்றுண்டு

          சில அறிஞர் பெருமக்கள் ஔவை என்பவர் ஒருவர் அல்ல. வயதான பெண்களை அழைக்கும் ஒரு சொல்தான் ஔவை என்பதால் இன்று நம்மிடையே இருக்கும் பாடல்கள் ஒருவரால் எழுதப்பட்டவையாக இருக்காது.. பல பெண்கவிஞர்கள்  பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பே என்றும் கூறுவதுண்டு.

          எது எங்ஙனம் இருந்தாலும், ஔவைப் பாட்டி தம் பாடல்கள் மூலம் வந்த கருத்துகளை நாம் கசடறக் கற்று புரிந்து கொண்டாலே போதும். ஔவைப் பாட்டி குழந்தைகளுக்காகவே நிறைய பாடல்கள் எழுதியது போலத் தோன்றினாலும் அவர் சொல்லும் அறவுரைகள் குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல. எத்துணை வயதினர் என்றாலும் வாழ்வின் இறுதிவரை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்..

             ஆத்திசூடி என்பது ஒரு வரியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.... ஆத்திசூடி என்பது அத்தி மரத்தின் பூவைத் தன் தலையில் சூடியிருக்கக் கூடிய எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கிறது ... 

      இதனைத் தவிர மூதுரை மற்றும் கொன்றை வேந்தன் என்னும் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

         

Wednesday, January 20, 2016

Ramayanam Q & A for kids

S.No Questions Answers
1 What are the two great1 Epics in India? The Ramayana and Mahabharatha
2 Who wrote Ramayana in Sanskirit? Valmiki.
3 Who wrote Ramayana in Tamil? Kambar
4 Rama is the avatar of what Hindu God? TheVishnu
5 Dasharatha was cursed by the parents of this boy, becaused he had killed him Shravana
6 Name three wives of Dasharatha? Kausala, Kaikeyi, Sumathra
7 Who are parents of Rama? Dasharatha and Kausala
8 Name the kingdom of Rama? Ayodhya
9 in which bank of river Ayodhya is located? River Sarayu
10 Who are parents of Sita? Janaka and Sunayna
11 Name the kingdom of Sita? Mithila
12 Who took Rama and Lakshmana on a quest at the beginning of 'The Ramayana'?  Vishwamithra
13 Whose bow did King Janaka make each of Sita's suitors try to string?  Shivas Bow
14 This maid advised Kaikeyi to ask dasharatha to make Bharatha , the king of Koshala Mantara
15 Name Rama's brother who goes with him into exile? Lakshmana
16 Who is wife of Laskmana who slept for all 14 years? Urmila
17 Rama released this lady who was cursed by her husband Sage Gautama as a stone, by stepping up that stone. Ahalya
18  This old saintly lady hadwaited in forest and  tasted the fruits for Rama so that she would not give any bitter ones to Sri Rama..  Shabari 
19 Shurpanakha, princess of Srilanka went to these brothers to complain after Laxmana cuts off her nose and ears. Khara and Dooshana
20 In which forest located in River Godavari in Nasik, Maharashtra, Ravana kidnapped Sita by disguising himself as a mendicant. The Panchavati forest
21 Who was dsguising as golden deer for helping Ravana in kidnapping of Sita. Mareecha
22 ___________ was the King of Bears who used his supernatural powers to help Rama find Sita.  Jatayu
23 Rama makes friendship with this vanara king living in the forests who had been banished from his kingdom by his brother Baali . Sugreeva
24 Who was the son of the Wind God and devotee of Rama set fire on Sri Lanka? Hanuman
25 In which garden was Sita held in captivity in Lanka? Ashokavan
26 Which brother of Ravana was cursed to sleep for six months at a stretch? Kumbhakarna
27 Who was Ravana's son who fought with Rama using his magical powers?  Indrajit
28 What is the name of Ravana's wife? Mandodhari
29 Ravana is also skilled as a  Musician
30 Name the kids of Rama and Sita Luv and Kush

Tuesday, January 12, 2016

கட்டுரை - பாரதியார் (25 வரிகளில்)

பாரதியார்

'எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'
என்று கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பே முழங்கியவன் தான் எங்கள் பாரதி..

இயற்பெயர் சுப்ரமணியன் என்றாலும் 'பாரதி' என்னும் பட்டத்தைத் தனது பதினோராம் வயதிலே தனது கவித்திறமையால், எட்டையபுர மகாராஜாவிடம் பெற்றவன் எங்கள் பாரதி...

'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ' என்ற தனது வாக்கிற்கேற்ப இறுதி வரை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கவிதை புனைந்தவன் எங்கள் பாரதி...

நாற்பது வயது வரை கூட வாழாத, நரைப்பருவம் எய்தாத, ஆனாலும் இதோ இன்று வரை எல்லாக் கவிஞர்களுக்கும் மகாகவியாய் வாழ்ந்து கொண்டிருப்பவன் எங்கள் பாரதி...

குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, சுதந்திரப்பாடல்கள், தெய்வீகப்பாடல்கள், ஞானப்பாடல்கள் இவ்வளவு ஏன்  குழந்தைகளுக்காக‍க் கூட பாப்பா பாடல்கள்  பாடினவன் எங்கள் பாரதி...

எத்தனை கவிஞர்கள் வந்த போதிலும்  எத்தனை பாடல்கள் வந்த போதிலும் , உலகின் ஏதாவது ஓர் தமிழ் மன்றத்திலும் எங்காவது ஓர் தமிழறிஞர் கூட்டத்தில் பாரதி என்னும் பெயரும் அவனது பாடல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.... இதை விட பெருமை வேறென்ன வேண்டும்? பாரதி எங்கள் பாரதி.....